வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா
வானத்தில் ஏறி ஏனைக்கட்டு
மேகத்தை அள்ளி மாலைக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா
கவலை நம்மை சிலநேரம் கூடப்போட்டு கொண்டாடும்
நீ என்னை தீண்டி வாழும்போதே
தீபத்தில் வெளிச்சம் உண்டாகும்
கடலை சேரும் நதியும் தன்னை தொலைத்து உப்பாகும்
ஆயினும்கூட மழையாய் மாறி மீண்டும் அதுவே முத்தாகும்
ஒரு வட்டம் போலே வாழ்வாகும்
வாசல்கள் இல்லா கனவாகும் அதில் முதலும் இல்லை
முடிவும் இல்லை புரிந்தால் துயரம் இல்லை
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...
வா வா நிலவ புடிச்சி தரவா வெள்ளி பொம்மையாக்கி தரவா
ஓஹோ விடியும்போது தான் மறைஞ்சி போகுமோ
கட்டிப்போடு மெதுவா
தனனன னனனா தனனன னனனா னன னன ஓஹோ...
னன னன னன னன னன னனா னா
ஆ ஹா ஹா ஹா இரவை பார்த்து மிரளாதே
இதயம் வேர்த்து துவளாதே
இரவுகள் மட்டும் இல்லையென்றால்
நிலவின் அழகு தெரியாதே
கனவில் பூக்கும் பூக்கள் எல்லாம் கைகளில் பறித்திட முடியாதே
அந்த வானம் போலே உறவாகும்
மேகங்கள் தினமும் வரும் போகும்
அட வந்து போனால் மறுபடி ஒன்று புதியதாய் உருவாகும்
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
வா வா கட்டலாம் அன்பால் படிக்கட்டு
ஓஹோ... ஹோ.. ஹோ...
ஓஹோ... ஹோ.. ஹோ...
இந்தப்பாட்டு ரொம்ப அருமையா இருக்குங்க :-) அதே மாதிரி இறகைப் போலே பாட்டும் அதோட படம் பிடிச்சா விதமும் ரொம்ப நல்லா இருக்கும்!
ReplyDelete